The News Sponsor By
feature-top
feature-top

நடிகர் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி. தமிழ்நாட்டில் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

நடிகை ரூபினி கடந்த 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். படபடவென வளர்ந்தவர் திடீரென சினிமாவை விட்டு மொத்தமாக விலகினார். ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ஆளே மாறிவிட்டாரே என அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

feature-top
feature-top